Thursday, December 22, 2022

13th Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 13ம் ஞாயிறு

13th Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1.29

 

சுருக்க ஜெபம்

ஆண்டவராகிய கடவுளே, எங்கள் இரட்சகராகிய உமது திருக்குமாரன் அடிக்கிறவர்களுக்குத் தமது முதுகைக் காட்டி அவமானத்திற்குத் தமது முகத்தை மறைக்கவில்லையே, வெளிப்படவிருக்கும் மகிமையின் மேலுள்ள உறுதியான நம்பிக்கையால், இக்காலத்தில் பாடு அனுபவிக்கக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும் படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் சந்தோஷப்படுங்கள். 1பேதுரு 4.13

No comments:

Post a Comment