Thursday, December 22, 2022

St. Mary Magdalen (22 July)

பரிசுத்த மகதலேனா மரியாளின் திருநாள் (ஜூலை 22)

St. Mary Magdalen (22 July)

 

ஆரம்ப வசனம்

வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்தாள். பரி.யோவான் 20.1

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது குமாரன், மகதலேனா மரியாளுக்கு மனதிலும் சரீரத்திலும் சுகமளித்து அவருடைய உயிர்த்தெழுதலுக்கு அவர் சாட்சியாயிருக்கும்படி அழைத்தாரே. அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமையால் உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய கிருபையினால் எங்களை மன்னித்து குணமாக்கியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இயேசு அவளை நோக்கி, மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து, ரபூவி என்றாள். அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். பரி.யோவான் 20.16

No comments:

Post a Comment