நமது ஆண்டவருடைய மறுரூபத் திருநாள் (ஆகஸ்டு 6)
The
Transfiguration of our Lord (6 August)
ஆரம்ப வசனம்
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு
கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்
பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே
பிரகாசித்தார். 11கொரிந்தியர் 4.6
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள பிதாவே, உமது
திருக்குமாரன் சிலுவையில் மரணத்தை உத்தரிக்குமுன் மகிமையில் வெளிப்படுத்தப்பட
சித்தங் கொண்டீரே, நாங்கள் அவரோடு கூட பாடனுபவிக்க
பலப்படுத்தப் பட்டவர்களாய் மகிமையின் மேல் மகிமையடைந்து, அவருடைய
சாயலில் மறுரூபமாகத் தக்கதாக, அவருடைய
மகிமையை உணர்ந்து கொள்ள எங்களுக்கு விசுவாசத்தை அருள வேண்டுமென்று உம்மோடும்
பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை
முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
ஆண்டவரே, நாம்
இங்கே இருக்கிறது நல்லது. பரி.மத்தேயு 17.4
No comments:
Post a Comment