Thursday, December 22, 2022

21st Sunday After Pentecost

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 21ம் ஞாயிறு

21st Sunday After Pentecost

ஆரம்ப வசனம்

நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். எபிரெயர் 13.14

 

சுருக்க ஜெபம்

நித்திய பிதாவே, எல்லாவற்றிற்கும் ஆண்டராய் இருந்து எல்லாவற்றையும் அரசாளுவதற்கு உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்து பரலோகத்திலுள்ள சிம்மாசனத்திற்கு ஏறினாரே. உமது திருச்சபையை ஆவியின் ஒருமையிலும் சமாதானத்தின் கட்டிலும் காத்து, சிருஷ்டிகள் யாவும் உமது பாதத்தில் ஆராதிக்க அவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

நாம் தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற படியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5.2,5

No comments:

Post a Comment