Wednesday, December 21, 2022

Epiphany 2

 பிரசன்னத் திருநாளுக்குப் பின்வரும் 2ம் ஞாயிறு

Epiphany 2

ஆரம்ப வசனம்

இயேசு அவர்களை நோக்கி, என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷனைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மாற்கு 1.17

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, உமது கிருபையினால் மாத்திரம் நாங்கள் உமது ஊழியத்திற்கென்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அழைக்கப்படுகிறோம். எங்களை உமது பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தி, எங்களுடைய அழைப்புக்குப் பாத்திரவான்களாக ஆக்கியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. பரி.யோவான் 6.68

No comments:

Post a Comment