Thursday, December 22, 2022

St. Andrew the Apostle (30 November)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயாவின் திருநாள் (நவம்பர் 30)

St. Andrew the Apostle (30 November)

ஆரம்ப வசனம்

இயேசு, என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மத்«யு 4.19

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயா உமது குமாரனின் அழைப்புக்கு உடனடியாக கீழ்ப்படியவும் தனது சகோதரனைத் தன்னோடு கொண்டுவரவும் அவருக்குக் கிருபை அருளினீரே. உமது பரிசுத்த வசனத்தால் அழைக்கப்படும் நாங்கள் தாமதமின்றி உம்மைப் பின் தொடரவும் உமது இராஜ்ஜியத்தின் நற்செய்தியை எடுத்துக்கூறவும், உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு, மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். பரி.யோவன் 1.41, 42

No comments:

Post a Comment