Thursday, December 22, 2022

The Annunciation of our Lord to the blessed Virgin Mary (25 March)

பாக்கியவதியாக பரிசத்த கன்னிமரியாள் மங்களவாக்கத் திருநாள் (மார்ச் 25)

The Annunciation of our Lord to the blessed Virgin Mary (25 March)

ஆரம்ப வசனம்

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். பரி.மத்தேயு 1.23, ஏசாயா 7.14

 

சுருக்க ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மனுஷ அவதாரத்தைத் தேவ தூதனுடைய வாக்கினால் அறிந்துகொண்ட நாங்கள் அவருடைய சிலுவையினாலும் பாடுகளினாலும் அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களாகும்படி, எங்கள் இருதங்களில் உம்முடைய கிருபையைப் பொழிந்தருள வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். பரி.யோவான் 1.14

No comments:

Post a Comment