பரிசுத்த யோவான் ஸ்நானகனின் பிறப்பு (ஜூன் 24)
The
birth of St. John the Baptist (24 June)
ஆரம்ப வசனம்
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் யோவான்.
அவன் அந்த ஒளியைக் குறித்துச் சாட்சி கொடுக்கச் சாட்சியாய் வந்தான். பரி.யோவான்
1.6,7
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது
குமாரனின் வருகைக்காக வழியை ஆயத்தம் பண்ணுவதின் மூலம் உமது நோக்கத்தை நிறைவேற்ற
உமது பணிவிடைக்காரனாகிய பரிசுத்த யோவான் ஸ்நானகன் ஆச்சரியமான விதமாய்ப் பிறந்தாரே,
அவர் போதித்தபடி நாங்கள் மனந்திரும்பவும்
அவருடைய முன்மாதிரியின்படி எப்பொழுதும் சத்தியத்தைச் சொல்லி, துன்மார்க்கத்தைத் தைரியமாய்க் கண்டித்து, சத்தியத்தினிமித்தம்
வரும் துன்பத்தைப் பொறுமையோடு சகிக்கவும் எங்களை வழி நடத்தியருள வேண்டுமென்று
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
தேவனுடைய இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம்
நம்மைச் சந்தித்திருக்கிறது. பரி.லூக்கா 1.79.
No comments:
Post a Comment