Wednesday, December 21, 2022

Christmas Eve

 கிறிஸ்து பிறந்த திருநாளுக்கு முந்தின தினம் (காலை)

Christmas Eve

ஆரம்ப வசனம்

விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள். யாத்.16.7

 

சுருக்க ஜெபம்

எல்லாம் வல்ல கடவுளே, உமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வருடந்தோறும் நினைவு கூர்வதினால் நீர் எங்களை மகிழ்விக்கிறீர். அவரை எங்கள் இரட்சகராக நாங்கள் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுவது போல், அவர் நியாயாதிபதியாக வரும்பொழுது, அவரை மெய்யான நம்பிக்கையோடே ஏற்றுக்கொள்ள கிருபை தந்தருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும். மாமிசமான யாவும் அதை ஏகமாய்க் காணும். ஏசாயா 40.5

No comments:

Post a Comment