பரிசுத்த மிகாவேல் முதலான சகல தேவதூதர்களின் திருநாள்
St.
Michael and all Angels (29 September)
ஆரம்ப வசனம்
கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே,
அவரை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 103.20
சுருக்க ஜெபம்
நித்திய ஆண்டவராகிய கடவுளே, தேவதூதரும்
மனிதரும் செய்யும் பணிவிடைகளை அதிசயமான பிரகாரமாய் ஏற்படுத்தினவரே. உமது பரிசுத்த
தூதர்கள் பரலோகத்தில் எப்பொழுதும் உம்மைச் சேவிப்பது போல, உமது
கட்டளையின்படி அவர்கள் பூலோகத்திலும் எங்களை ஆதரித்துக் காப்பாற்றும்படி கிருபை
செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
உம்மை என் முழு இருதயத்தோடு துதிப்பேன். தேவர்களுக்கு முன்பாக
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். சங்கீதம் 138.1
No comments:
Post a Comment